திமுக பிரமுகர் கைது: கோவையில் பரபரப்பு

கோவையில் திமுகவைச் சேர்ந்த முருகன் என்ற பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவை பகுதியைச் சேர்ந்த முருகன், அமைச்சர் வேலுமணி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக கூறப்பட்டது

இதுகுறித்து அதிமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகன் கைது செய்யப்பட்டு அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் கோவை திமுக பிரமுகர் முருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தொண்டர்கள் கோவை காவல் நிலையத்தின் முன் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply