shadow

iplஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டி ஒன்றில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கதா அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய சென்னை அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் முதல் பந்திலேயே அவுட் ஆனார். இருப்பினும் மெக்கல்லம் மற்றும் டீபிளஸ்ஸிஸ், பிராவோ ஆகியோர் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் சென்னை அணி எடுத்தது.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி உத்தப்பாவின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராபின் உத்தப்பா மிக அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் கொல்கத்தா அணியின் ரூஷல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply