shadow

cricket9வது ஐ.பி.எல் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. எஸ்.எஸ்.ஐயர் 60 ரன்களும், டுமினி 54 ரன்களும் எடுத்தனர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் போபாரா 41 ரன்களும், வார்னர் 28 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது. பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூசல் அதிரடியாக 36 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இன்றைய ஆட்டங்களில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளும், பெங்களூர் மற்றும் மும்பை அணிகளும் மோதவுள்ளன.

Leave a Reply