shadow

ஐபிஎல் போட்டிக்காக நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்: அதிரடி அறிவிப்பு

ஐபிஎல் போட்டிக்காக நள்ளிரவு வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் வரும் மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளது

இந்த நிலையில் இந்த போட்டியை கண்டு ரசிக்க வரும் ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தினங்களில் நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது