shadow

முன்னாள் திமுக அமைச்சரின் மகன் அதிரடி கைது: அந்நில செல்வானி மோசடியா?

திமுக ஆட்சியின்போது அமைச்சராகவும், சக்தி மிகுந்த திமுக தலைவர்களில் ஒருவராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத்துறையினர் திடீரென கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் உள்பட விஐபிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்து வரும் நிலையில் இன்று காலை தி.மு.கவின் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனை சென்னையில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரூ.80 கோடி அந்நிய செலாவணி மோசடியில் அவர் ஈடுபட்டதாகவும், ஏற்கெனவே கைதான தொழிலதிபர் லியாகத் அலிகான் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அன்பழகனை கைது செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply