தமிழக தமிழர்கள் அகதிகளா? கொதித்து எழுந்த அதிமுக எம்பிக்கள்
தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் அதிகம் வருகை தருகின்றனர் என்று நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு அவர்கள் பேசியதற்கு அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
நேற்று மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு , ‘வங்கதேசம், மியான்மர், மற்றும் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருவதாக கூறினர். இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகம் இருக்கும்போது, இந்தியாவிற்குள் வரும் தமிழர்கள் அகதிகளா? என்று கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, ‘இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்கள்’ என்பதற்கு பதிலாக வாய்தவறி தமிழகத்தில் இருந்து வரும் தமிழர்கள்’ என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அதிமுக எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானப்படுத்திய பின்னர் மீண்டும் அவை இயங்கியது.
Leave a Reply
You must be logged in to post a comment.