shadow

சிஎஸ்கே அணியை அடுத்து வெற்றியை ருசித்த பஞ்சாப் அணி

நேற்று நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கபப்ட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் காம்பீர் 55 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிஅ பஞ்சாப் அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 51 ரன்களும், கேகே நாயர் 50 ரன்களும் எடுத்தனர். ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply