shadow

பூமிக்குள் திடீரென மூழ்கும் கிணறு: அதிர்ச்சி வீடியோ

பூகம்பம், சுனாமி மற்றும் வெள்ளம் ஆகியவை ஏற்படும்போது திடீர் திடீரென வீடுகள் பூமிக்கடியில் மூழ்குவதும் வெள்ளத்தில் அடித்து செல்வதும் நடக்கும் நிகழ்வுகளாகும். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில், மனந்தவாடி என்ற இடத்தில் உள்ள 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுக் கிணறு ஒன்று பூமிக்குள் திடீரென நேற்று முன் தினம் மூழ்கியது.

கிணற்றுக்கு அடியில் செல்லும் நீரோட்டம் காரணமாக கிணறு பூமிக்குள் மூழ்கியுள்ளது என்று காரணம் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிணறு பூமிக்குள் மூழ்கும்போது ஒருவர் தனது உயிரையும் துச்சமாக மதித்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply