பினராயி விஜயனின் அதிரடி உத்தரவு
கேரளாவில் உள்ள பாலக்காடு என்ற பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடி மருந்து கலந்த அன்னாசிப்பழத்தை கொடுத்த அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள், அந்த யானையை கொன்றது பெரும் சர்ச்சையாகியது
இதுகுறித்து வன அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்தததை அடுத்து சமூக வலைத்தளங்களில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கொந்தளித்தனர்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநில வனத்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.