shadow
சசிகலாவுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு. நடந்தது என்ன?
பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை அதிமுக நிர்வாகிகளே தற்போது அதிகமாக சந்திப்பது இல்லை. ஆனால் விசுவாசம் காரணமாக அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவரான கருணாஸ் நேற்று திடீரென சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக அம்மா அணியின் எம்.எல்.ஏக்கள் பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் அமைச்சர் ரமணா, மொளச்சூர் பெருமாள் ஆகியோர்களும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் சென்றனர்.
இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது கட்சி, ஆட்சியை வழிநடத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து சசிகலா ஒருசில ஆலோசனைகள் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், ‘விரைவில் சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதவுள்ளதாகவும், அந்த கடிதத்தில் சில அதிரடி உத்தரவுகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சசிகலா-கருணாஸ் சந்திப்பு அதிமுகவின் இரு அணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply