shadow

ரஜினியுடன் திடீர் சந்திப்பு ஏன்? கருணாஸ் பேட்டி

சசிகலா ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் 122 பேர்களும் தமிழக மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் நிலையில் அவர்களில் ஒருவரான கருணாஸ், சமீபத்தில் அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தனக்கு ஓட்டு போட்ட 75000 பேர்களுக்கு மட்டுமே தான் பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்றும், மீதியுள்ளவர்கள் தன்னிடம் கேள்வி கேட்க உரிமையில்லை என்று கருணாஸ் கூறியதால் திருவாடனை தொகுதி மக்கள் கருணாஸ் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சற்று முன்னர் கருணாஸ் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கருணாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply