shadow

கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதி

சமீபத்தில் பூரண உடல்நலம் பெற்று காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்தி ஒன்று நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது மீண்டும் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொண்டை மற்றும் நுரையிரல் தொற்று காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் மீண்டும் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திமுக தலைவரும் , முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி சென்னை அழ்வார் பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்படுள்ளார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையிரலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக மூச்சுதிறணல் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட நோய் தொற்ற்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமாக உள்ளார். அவருக்கு மருத்துவ குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply