shadow

கார்த்திக் சிதம்பரம் திடீர் லண்டன் பயணம்: கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவா?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் நேற்று முன் தினம் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் அவரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன

கார்த்திக் சிதம்பரத்தின் வாக்கு மூலத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தவுடன் அவர் வீட்டில் இருந்த கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சீலிட்டு எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரம் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனிடையே இன்று காலை கார்த்திக் சிதம்பரம் திடீரென பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானம் மூலம் லண்டனுக்கு சென்றுள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பவே அவர் லண்டனுக்கு சென்றுள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.

Leave a Reply