shadow

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை. வெள்ள அபாய எச்சரிக்கை

Hogenakkal_trip 036.0தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசல்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் தொடரந்து கனமழை பெய்ததால், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள தர்மபுரி போலீசார் அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

Leave a Reply