shadow

இலங்கை எதிர்க்கட்சி தலைவருக்கு கருணாநிதி நன்றி

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி 13வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுபியிருந்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித இரா.சம்பந்தனுக்கு நன்றி கூறி திமுக தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் குறித்தும், நான் 13வது முறையாக தமிழ்நாட்டின் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்தும் அன்போடும், பாசத்தோடும் எழுதிய கடிதம் கிடைக்க பெற்றேன். இலங்கைவாழ் தமிழ் மக்கள் சார்பில் தாங்கள் தெரிவித்துள்ள வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கை தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்கு என்னுடைய பங்களிப்பு தொடர வேண்டுமென்று உங்கள் கடிதத்தில் எழுதியிருக்கிறீர்கள். 1956ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய என்னுடைய அந்த பணி தாங்கள் விரும்பியது போலவே என்றைக்கும் தொடரும் என்ற உறுதியினை உங்களுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

karuna nidhi

Leave a Reply