shadow

பிரபல பாலிவுட் நடிகைக்கு மறுதிருமணமா?

பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை என்ற அளவில் பெயரெடுத்தவர் என்பது தெரிந்ததே. இரண்டு விஐபிக்களை காதலித்து அந்த இரண்டுமே தோல்வி அடைந்த பின்னர் சுஞ்சய் கபூர் என்பவரை கரீஷ்மா திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு அழகிய குழந்தைகள் பிறந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் கரிஷ்மா கபூர் மீண்டும் திருமணம் செய்யவுள்ளதாக பாலிவுட்டில் வதந்திகள் பரவு வரிகிறது. அவர் சந்தீப் தோஷ்னிவால் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை சந்தீப் மறுத்துள்ளார்.

தனக்கு தன்னுடைய குழந்தைகள் தான் முக்கியம் என்றும் தன்னுடைய வாழ்வில் இன்னொரு திருமணம் இல்லை என்றும் இன்னொரு குடும்ப வாழ்க்கையை தொடர தான் விரும்பவில்லை என்றும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

43 வயதாகும் கரீஷ்மா கபூர் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் ‘ஜீரோ’ என்ற படத்தில் கரீஷ்மா கபூராகவே நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply