shadow

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கரீனா கபூரின் வீட்டுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நடிகை கரீனா கபூர் கொரோனா விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.