TNPL கிரிக்கெட்: லைகா அணிக்கு மேலும் ஒரு தோல்வி. காரைக்குடி காளை அபார வெற்றி
ஐபி.எல் போட்டிக்கு இணையாக தமிழகத்தில் நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்ற்ன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வீழ்த்தியது.
முதலில் டாஸ் வென்ற காரைக்குடி காளை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பத்ரிநாத் 53 ரன்களும், அனிருதா 45 ரன்களும் எடுத்தனர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காரைக்குடி அணியின் சோனு யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.