கனிமொழி வெளியிட்ட வீடியோ
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் பழ வியாபாரிகளின் தள்ளுவண்டிகளை கவிழ்த்தும், தள்ளுவண்டிகளில் இருந்த பழங்களை தூக்கி எறிந்தும் செய்த செயலை கனிமொழி எம்பி கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார்? அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
கனிமொழியின் இந்த குற்றச்சாட்டை அடுத்து அதற்கு விளக்கம் அளித்த வாணியம்பாடி நகராட்சி ஆணையர், சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் பொருளாதார சமூக தொற்றாக பல்வேறு பகுதிகளில் பரவக் கூடிய நிலை வாணியம்பாடியில் ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த செயலை செய்தேன் என்றும் பலமுறை பலரிடம் எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் கடை போட்டதால் தான் இந்த மாதிரி செய்ய நேரிட்டது என்றும் எனினும் தனது செயலுக்காக வருந்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார்.. 1/2 pic.twitter.com/dneJFhX5sR
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 12, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.