shadow

சாலை விபத்தில் உயிருக்கு போராடிய ஒருவரை காப்பாற்றிய கனிமொழி

சாலை விபத்து ஒன்றில் சிக்கிய ஒருவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், தி.மு.க எம்பி., கனிமொழி. இந்த விஷயம் ஃபேஸ்புக், டுவிட்டரில் பரவி வருவதால் கனிமொழிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில், பள்ளி ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக நேற்று முன்தினம் திமுக எம்பி கனிமொழி நெல்லை சென்றார். இந்த விழா முடிந்த பின்னர் திமுகவினர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் தேனி மாவட்டத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார். பின்னர் மாலை 5 மணி மதுரை விமான நிலையத்தை நோக்கி சென்று கொட்னிருந்தார்.

மதுரைக்கு செல்லும் வழியில், ஓரிடத்தில் சிலர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அதைப் பார்த்த கனிமொழி, காரை நிறுத்தச் சொன்னார். அங்கு, விபத்தில் ஒருவர் அடிபட்டுக் கிடப்பதை பார்த்ததும், உடனே அவரைத் தனது மாவட்ட செயலாளர் ஒருவரின் காரில் எடுத்துச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கனிமொழி.

குறிப்பாக, ‘அவரது உடல்நிலைகுறித்த தகவலை எனக்கு அளிக்க வேண்டும்’ என்று மாவட்ட நிர்வாகிகளுக்குக் கனிமொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கனிமொழியின் இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply