கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே
குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதியான தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் சென்னை மட்டுமன்றி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் சற்றுமுன் அறிவித்துள்ளனர்

மற்ற மாவட்டங்களில் நிலை குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply