shadow

சசிகலாவை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியதில் இருந்தே சமூக பதிவுகளை அவ்வப்போது தனது டுவிட்டரில் பதிவு செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் நேற்று சசிகலாவை மறைமுகமாக தாக்கும் வகையில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை சென்றதும், 104 செயற்கை கோள்களுடன் இந்திய ராகெட் சென்றதும் என இருவேறு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன.

இந்த இரு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் ‘107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட,104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்.வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழியபாரத மணித்திருநாடு’ என்று கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதாவது 107 செயற்கை உறுப்பினர்கள் என,கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களையும், செயற்கை உறுப்பினர்களை ஏவியவர் என சசிகலாவைவும் கமல் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply