shadow

நரி பரியாகுமா? இன்று தெரியும். கமல்ஹாசன்

பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த நாளில் இருந்து இன்று வரை நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங் செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றது. ரூபாய் நோட்டு பிரச்சனையை அடுத்து ஜெயலலிதா மரணம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு போராட்டம், ஓபிஎஸ்-சசி மோதல் என பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சமே இல்லை

இந்நிலையில் சமீபகாலத்திய ஒவ்வொரு நிகழ்வுகளையும் தனது பாணியில் டுவிட்டரில் கருத்து சொல்லி வரும் நடிகர் கமல்ஹாசன், இன்று சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும் எளிதில் புரியாத வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில், ‘ நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா? அந்தச் சொக்கனின் தந்திரமா? பார்ப்போம்’ என்று கூறியுள்ளார். கமல் எதை மனதில் வைத்து கொண்டு இந்த கருத்தை கூறினார் என்பதை அவரை தவிர வேறு யாராலும் விளக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே

Leave a Reply