shadow

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக போராடி வந்தபோதிலும், தற்போது இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பை அடுத்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சமீபத்தில் தூத்துக்குடி முழுவதும் கடையடைப்பு போராட்டமும் நடந்தது

இந்த நிலையில் தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் போராட்ட களத்தில் குதிக்கவும் தயார் என்று அவர் அறிவித்துள்ளார்

கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டன் வாழ் தமிழ் மக்கள் யாருடைய அழைப்பும் இல்லாமல் போராடி வரும் நிலையில் அழைத்தால் வருவேன் என்று கமல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply