எல்லா மாடுகளும் மணி அடிக்க கூடாது: பிக்பாஸ் எதிர்ப்பு குறித்து கமல் ஆவேசம்
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியால் இந்திய கலாச்சாரமே சீரழிந்துவிட்டதாகவும், இதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்வது மட்டுமின்றி கமல்ஹாசன் உள்பட அந்த நிகழ்ச்சியின் அனைத்து பங்கேற்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தது
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தற்போது விளக்கம் அளித்துள்லார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் புகார் கொடுக்கலாம், அந்த புகாருக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். கன்றினை இழந்த பசுதான் ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்க வேண்டும். எல்லா மாடுகளும் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சி 11 வருடங்களாக இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்திலும் ஏற்கனவே ஒளிபரப்பாகியுள்ளது. புகார் கொடுத்தவர்களுக்கு இந்தியும் தெரியாது, கன்னடமும் தெரியாது. வெறும் கலாச்சாரம் மட்டுமே தெரியும் என்பதால் தான் இந்த பிரச்சனை’என்று கூறினார். இருப்பினும் என் மீது புகார் கொடுத்தவர்களும் எனது ரசிகர்கள்தான் என்னை சிறையில் வைத்து அழகு பார்க்க நினைக்கும் ரசிகர்கள்’ என்று கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.