shadow

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: பச்சை பட்டு உடுத்தி காட்சி அளித்தார்!

மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் சற்றுமுன் இறங்கினார்,

வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் ஆடிப்பாடி தண்ணீர் பீச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஆயிரக்கணக்கானோர் வைகை ஆற்றின் கரையில் நின்று பார்த்து அழகரை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.