shadow

போதை பொருள் வழக்கில் காஜல் அகர்வால் மேனேஜர் தொடர்பா?

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக திரைநட்சத்திரங்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜோசப் என்கிற ரோணியை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரோணியின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்த கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ரோணிக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கும் என்று கருதி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோணி காஜல் அகர்வாலுக்கு மட்டுமின்றி நடிகை லாவண்யா திரிபாதி மற்றும் ராசி கண்ணா ஆகியோருக்கும் மேனேஜராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply