shadow

‘கபாலி’ டிக்கெட் கட்டணம். தமிழக அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

theatreதமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நிர்ணயிக்க கட்டணத்தைவிட அதிக கட்டணங்களை வசூல் செய்யும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடரந்தார். இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை மதிக்காமல் ரஜினியின் கபாலி படத்துக்கு திரையரங்குகள் அதிக கட்டணங்கள் வசூலித்தது என்றும் அதன் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறி தேவராஜன் மீண்டும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தற்போது தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ‘தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக தொகையை படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வெளியானது.

இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களிடம் பெரும் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவராஜன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழக அரசு அதிக கட்டணம் தியேட்டர்களில் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. மேலும் தியேட்டர்கள் நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் செய்த இலவச தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தியேட்டர்களாக திடீரென சென்று சோதனை நடத்த அதிகாரிகளை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஐகோர்ட்டின் உத்தரவின்படி தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply