உலக கோப்பை கபடி போட்டி. இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் மோதல்
3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் தற்போது தாய்லாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான போட்டியில் தாய்லாந்து அணி 37-33 என்ற கணக்கில் போராடி ஜப்பான் அணியை தோற்கடித்தது அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வரும் இன்று தாய்லாந்து அணி இந்தியாவுடன் மோத உள்ளது. மற்றொரு அரையிறுதி போட்டியில் ஈரான் அணி மற்றும் தென் கொரியா அணி மோதுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.