shadow

காதலாட காதலாட காத்திருந்தேனே..அஜித்தின் ‘விவேகம்’ படப்பாடலின் வரிகள்

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடலான ‘காதலாட’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கபிலன் வைரமுத்து எழுதிய இந்த பாடலின் வரிகள் இதோ”:

உன்னோடு வாழ்வது ஆனந்தமே..
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே..
தீராத தேவைகள் ஆனந்தமே..
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே..

பல்லவி

காதலாட காதலாட காத்திருந்தேனே..
ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே..
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே…

சரணம்

நீலவானம் மாய்ந்த போதும்
நீ இருப்பாயே…
தேவகானம் தூய மெளனம்
நீ கொடுப்பாயே…

பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே..
நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே..
ஆலகால நஞ்சு பாய்ந்தது
மெல்ல மீள்வோமே..
பிள்ளை தெய்வம்
மண்ணில் தோன்றிட
வாழ்வு நீள்வோமே

Leave a Reply