shadow

பகவத் கீதை மசோதாவை குப்பைக்கூடைக்கு அனுப்ப வேண்டும். கீ.வீரமணி

சமீபத்தில் பகவத்கீதையை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதாரி, பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி கிடைத்து வரும் நிலையில் இந்த மசோதாவை குப்பைக்கூடைக்கு அனுப்ப வேண்டும் என்று தி.க.தலைவர் கீ.வீரமணி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கொண்ட பகவத்கீதையை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதாரி, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத்கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடித்து, குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும்.

பகவத்கீதையை தேசிய நூலாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு புயல் போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது. மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்”

இவ்வாறு கீ.வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply