shadow

காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக கே.ஆர்.ராமசாமி தேர்வு. விஜயதரணிக்கு ஏமாற்றமா?
congress
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காரைக்குடி தொகுதியில் கே.ஆர். ராமசாமி, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி, நாங்குநேரியில் ஹெச்.வசந்தகுமார், தாராபுரத்தில் வி.எஸ்.காளிமுத்து, உதகையில் கணேஷ், கிள்ளியூரில் ராஜேஷ், குளச்சலில் பிரின்ஸ், முதுகுளத்தூரில் பாண்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் பதவிக்கு காரைக்குடி எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி, நாங்குநேரி எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார் மற்றும் விளவங்கோடு எம்எல்ஏ. விஜயதரணி ஆகியோர் கடும் போட்டி போட்டதால் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பெயரை தலைமை அறிவிப்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கட்கிழமை வெளியிட்டார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கொறடாவாக விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் திமுகவுடன் இணைந்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவோம். தேர்தல் தோல்விக்கு ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவது சரியல்ல. தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் எதிர்க்கிறது”

Leave a Reply