பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்: முக ஸ்டாலின் தலைமையில் இறுதி ஊர்வலம்

திமுகவின் மூத்த தலைவரும் திமுகவின் பொதுச் செயலாளரும் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் உற்ற நண்பருமான க. அன்பழகன் அவர்கள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த க. அன்பழகன் அவர்கள் சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

அவருக்கு தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் க. அன்பழகன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

`முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், 43 ஆண்டுகள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் சில நாட்கள் உடல் நலிவுற்றிருந்து இன்று 07-03-2020 அதிகாலை 1:00 மணியளவில் மறைவெய்தியதையொட்டி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டு, கழகக் கொடிகள் ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Leave a Reply