ஜோதிர் ஆதித்ய சிந்தியா முதல்வராகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் உள்ள நிலையில் அங்கே காங்கிரஸ் கட்சியின் 17 எம்எல்ஏக்கள் திடீரென மாயமானார்கள்

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆகியோர்களை ஜோதிர் ஆதித்ய சிந்தியா சந்தித்து பேசியதாகவும் அவருடைய தலைமையில் அமையும் புதிய ஆட்சிக்கு இந்த பாஜக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது

இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது

Leave a Reply