தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் ஜோதிகா
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, தற்போது ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம்வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் பாலா புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் முக்கிய கேர்கடர் ஒன்றில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் ஜோதிகாவின் கணவர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பதும் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.