உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஜூரிச் சாலஞ்ச் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தும் பங்கேற்றுள்ளார்.
முதல் சுற்றில் அர்மேனியா நாட்டின் லெவான் ஆரோனியன் என்ற வீரரிடமும், இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார். ஆனால் மூன்றாவது சுற்றியில் இத்தாலியின் பேபியானோ காருடனாவுடன் மோதிய ஆட்டத்தை டிரா செய்தார். இதன்மூலம் அவருக்கு ஒரு புள்ளி கிடைத்துள்ளது. ஆனாலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார்.
தற்போது 5 புள்ளிகள் பெற்று நார்வே வீரர் கார்ல்சென் முதலிடத்தில் உள்ளார். அர்மேனியாவின் லெவான் ஆரோனியன் 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.