3 மணி நேரம் முடங்கிய ஜியோ: பொதுமக்கள் அவதி
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று திடீரென மூன்று மணிநேரம் ஜியோ நெட்வொர்க் வேலை செய்யாமல் போனதால் பொதுமக்கள் கடும் அவதியில் இருந்தனர்.
ஏற்கனவே ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த சில மாதங்களுக்கு பலருக்கும் எடுக்கவில்லை. பின் ஏர்செல் நிறுவனம் மொத்தமாக மூடப்பட்டது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவில் தான் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சில மணிநேரங்கள் ஜியோ நெட்வொர்க் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை ஏற்பட்டது.
நேற்று மாலை 6 மணிக்கு ஜியோ வேலை செய்யாமல் போன ஜியோ நெட்வொர், இரவு 9 மணி அளவில் சரி ஆகிவிட்டது. 3 மணிநேரம் வாய்ஸ் கால், இணையம் இயங்கவில்லை. கால் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிபட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.