shadow

கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும்: வைரமுத்துக்கு ஜீயர் எச்சரிக்கை

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டால் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் சடகோப ராமானுஜ ஜீயர் தொர் போராட்டம் நடத்தி வருகிறார்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது, ‘கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால், அதை செய்யமாட்டோம் பிப்.3ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர் கெடு விதித்துள்ளார்.

ஏற்கனவே தினமணி ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply