பிரதமர்-முதல்வர் சந்திப்பில் பேரறிவாளன் விடுதலை குறித்து ஆலோசனையா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை எடுத்துரைக்கவுள்ள நிலையில் அவரது பட்டியலில் பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை கோரிக்கையும் உள்ளதாகவும் இதுகுறித்து பிரதமரிடம் ஜெயலலிதா பேசவுள்ளதாகவும் 25 வருட பிரச்சனைக்கு தற்போது முடிவு தெரிந்துவிடும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் நடைபெற்ற பேரணியில் ‘உங்கள் மகன் கண்டிப்பாக வீடு திரும்புவார், கவலைப்படாமல் போங்கள்’ என்று முதல்வர் அற்புதம்மாளிடம் ஆறுதல் கூறியதை நெகிழ்ச்சியுடன் கூறுகின்றார் அற்புதம்மாள். பேரணியில் கலந்து கொண்டவர்களும் கட்சி வேறுபாடின்றி முதல்வர் மற்றும் அற்புதம்மாள் பட பேனர்களை எடுத்து கொண்டு வந்ததையும் அதிமுகவினர் ஆச்சரியமாக பார்த்தனர்.
எனவே நாளைய டெல்லி பயணத்தில் கண்டிப்பாக ஏழு பேர் விடுதலை குறித்து முதல்வர் பிரதமரிடம் பேசி ஒரு நல்ல முடிவை பெற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.