shadow

சமாதியை சுற்றி வருகிறதா ஜெயலலிதா ஆவி?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் ஆவி உக்கிரமாக இருப்பதாகவும், அவரது கோபத்துக்கு ஆளானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பழநி ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆவி அவரது நினைவிடத்தை சுற்றி சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஒரு புகைப்படம் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகி’றது.

ஏற்கனவே மேலும் ஜெ., உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட தினத்தில் அவருடைய ஆவி போன்ற உருவம் ஒன்று அந்த நினைவிடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஜெயலலிதாவின் அழுக்குரல் சமாதி அருகே நள்ளிரவில் கேட்பதாக வதந்தி ஒன்றும் பரவியது.

இந்தநிலையில் தற்போது மற்றொரு வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வர்தா புயலின் போது சென்னையில் பல மரங்கள் வேறோடு சாய்ந்த போதிலும் கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா நினைவிட மேற்கூரைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜெயலலிதாவின் ஆவி தான் தனது நினைவிடத்தை காப்பதாகவும் அதனால் தான் நினைவிடக் கூரைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அந்த வதந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply