ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் முத்திரைத்தாள் விற்றவர் ஒருவரே. ஆச்சரியமான ஒற்றுமை
தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் முத்திரைத்தாள் இணைத்து தாக்கல் செய்யப்படுவது வழக்கம். நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் இருவரும் ஒரே நபரிடம் முத்திரை தாள் வாங்கிய விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது.
அந்த நபர் ரஃவுப் பாஷா என்பவர்தான். சென்னையில் பல வருடங்களாக முத்திரைத்தாள் வியாபாரம் செய்துவரும் இவரிடம் எந்த நேரம் சென்றாலும் முத்திரத்தாள் கிடைக்கும் என்பதால் பலர் இவரை அணுகி முத்திரைத்தாள் வாங்குகின்றனர். சுப்பிரமணியசுவாமி உள்பட பல தலைவர்கள் செண்டிமெண்ட் காரணமாக இவரிடம்தான் ரெகுலராக முத்திரைத்தாள் வாங்குவார்களாம்.
ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் முத்திரைத்தாள் வழங்கியது குறித்து இவர் கூறியபோது, “இரு தலைவர்களும் என்னிடம் வாங்கிய முத்திரைத் தாளை பயன்படுத்தி இருப்பதை செய்தித் தாள்களைப் பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்’ என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.