மூட்டைப் பூச்சியை நசுக்குவதைப் போல தினகரனை நசுக்க வேண்டும்: ஜெயக்குமார்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தினகரன் மீது அதிமுக தலைவர்கள் ஆத்திரத்தில் உள்ளனர் என்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரிகிறது. இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘மூட்டைப் பூச்சியை நசுக்குவதைப் போல தினகரனை நசுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் சட்டப்பேரவைக்கு வருவது தங்களுக்கு நெருக்கடி அல்ல என்றும், 20 ரூபாய் டோக்கனால் ஆர்.கே.நகர் தொகுதியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், கடத்தல்காரர்களான பில்லாவும் ரங்காவும் நாட்டை ஆளக்கூடாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.
டிடிவி தினகரனும், மு.க.ஸ்டாலினும் கைகோர்த்து செயல்படுவதாகவும், மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக வெற்றிபெறாது என அவர் சகோதரர் மு.க.அழகிரியே சான்றிதழ் அளித்திருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.