எம்.எல்.ஏக்களை அடைத்து வைப்பது சட்ட விரோதம்: கூவத்தூரில் அடைத்து வைத்த அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணி இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டவுள்ளது. இந்த கூட்டத்தில் தினகரன் அணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தங்கதமிழ்ச்செல்வன் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தான் இன்னும் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘சட்டவிரோதமாக, விடுதியில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார். இதே ஜெயகுமார், சசிகலா அணியில் இருந்தபோது எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போதுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவால் பதவிக்கு வந்தவர்கள் என்றும் எனவே அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து உரிய முடிவை எடுப்போம் என்றும் ஜெயகுமார் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.