நித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் பதவியை பிடிக்க தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அம்முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை

சமீபத்தில் நடைபெற்ற 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திலும் திமுக வெற்றி பெற்று இருந்தால் கண்டிப்பாக அவர் முதல்வராக இருப்பார். ஆனால் 14 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றதால் முதல்வர் கனவு மீண்டும் பொய்த்துப்போனது

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராவது குறித்து இன்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’நித்யானந்தா போல் ஒரு தனி தீவை விலைக்கு வாங்கி அதில் அவர் முதலமைச்சராக தன்னைத்தானே முக ஸ்டாலின் அறிவித்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து திமுகவினரை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply