வெண்டிலட்டர் பற்றாக்குறை: விலங்குகளுக்கு பயன்படுத்துவதை மனிதர்களுக்கு பயன்படுத்தும் கொடூரம்

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலகமெங்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ஜப்பானில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விலங்குகளுக்கு பொருத்தப்படும் வெண்டிலேட்டர்களை மனிதர்களுக்கு பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது

விலங்குகளுக்கு பயன்படுத்தப்படும் வெண்டிலட்டர் மனிதர்களுக்கு பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்பும் நேராது என்று மருத்துவர்கள் சங்கம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் அதனை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது

மேலும் விலங்குகளின் சுவாச அமைப்பு மனிதர்களுடன் ஒட்டி உள்ளதால் இது சாத்தியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply