டிரம்ப் வெற்றியால் பதவியை ராஜினாமா செய்த அமெரிக்க உளவுத்துறை தலைவர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் அரசு உயரதிகாரிகள் மாற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என்ற செய்தி பரவி வரும் நிலையில் இப்போதே ஒருசில அதிகாரிகள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.
அந்த வகையில் அமெரிக்க உளவுத்துறை தலைவராக இருந்த ஜேம்ஸ் கிளாப்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ஒபாமாவால் நியமனம் செய்யப்பட்ட இவர் டிரம்ப் வெற்றியை அடுத்து ராஜினா செய்துள்ளதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை அவர் அமெரிக்க அரசிடம் அளித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆனாலும் ஒபாமா அதிபர் பதவியில் இருக்கும் கடைசி நாள் வரை ஜேம்ஸ் கிளாப்பர் தனது பணியை தொடர்வார் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.