shadow

அடுத்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா? செப்டம்பரில் 9-ல் வழக்கு விசாரணை

jallikattu
ஜல்லிக்கட்டு நடத்த கடந்த 2014ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. எனவே 2017ஆவது ஆண்டிலாவது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மிகுந்த முயற்சி செய்து வருகின்றனர். தமிழக அரசும் அவ்வப்போது மத்திய அரசை இதுகுறித்து வலியுறுத்தி வருகிறது.

இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நேற்றைய விசாரணை தொடங்கியதும், மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு சில மனுதாரர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் நகல் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் அனைவருக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கின் இறுதி விசாரணையை வருகிற நவம்பர் 9–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். வரும் 9ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக வழக்கு செல்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply