shadow

நான் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தேனா? ஜெய் ஆவேசம்

சமீபத்தில் வெளியான ‘பலூன்’ படம் சுமாராக ஓடி வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த ஜெய் மீது பல திடுக்கிடும் புகார்களை இயக்குனர் சினிஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியது. அதில் முக்கியமான ஒன்று ஜெய் எப்போதும் படப்பிடிப்புக்கு வரும்போது குடித்துவிட்டுத்தான் வருவார் என்பது ஆகும்

இந்த நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஜெய் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: என்மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை. என் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவே இதனை பார்க்க முடிகிறது.

சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு நான் வந்துள்ளேன், இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. என்னை வைத்து படம் தயாரித்த அனைவருக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும். இதுவரை எந்த தயாரிப்பாளரும் என்மீது புகார் கூறியதில்லை. ‘பலூன்’ திரைப்படம் இதுவரை ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. எனவே இந்த படம் வசூல் ரீதியில் வெற்றிப்படம் தான்.

இவ்வாறு நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

Leave a Reply