shadow

LRG_20150629101540981672

வெள்ளவேடு அடுத்த, திருமழிசை, ஜெகநாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, கருடசேவை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, அதிகாலை, 5:30 மணிக்கு, ஜெகநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஜெகநாத பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின், ஸ்ரீதேவி, பூதேவி, திருமழிசை ஆழ்வாருடன் ஜெகநாத பெருமாள் நான்கு மாட வீதிகளை வலம் வந்து, கோவிலை வந்தடைந்தார். மாலை, 3:00 மணிஅளவில் திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு ஜெகநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், அனுமன் வாகனத்தில் திருவீதியுலாவும் நடந்தது.

Leave a Reply