shadow

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கொல்கத்தா அணி சாம்பியன்

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கேரள மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின

இரு அணிகளும் சம பலத்தில் இருந்ததால் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்று கணிக்க முடியாமல் இருந்தது. களத்திலும் இரு அணி வீரகளும் ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் மோதியதால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை முடிவு செய்ய பெனால்டி ஷாட்டின் மூலம் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதில் கொல்கத்தா 4 கோல்களும், கேரளா மூன்று கோல்களும் அடித்ததால் கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Leave a Reply